இலங்கை அணிவீரர்களின் பீ .ஸீ .ஆர் பரிசோதனை வெளியானதால் போட்டி நடைபெறுகிறது!

Date:

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இதனால் போட்டி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி இருந்த நிலையில் சமிந்த வாஸ் மற்றும் இசுரு உதானவிற்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளான மூவருக்கும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவர்களில் இருவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கை அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஸிரான் பெர்ணான்டோவிற்கு மாத்திரம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் போட்டியை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...