ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதை எதிர்க்கட்சித் தலைவர் விரும்பவில்லை என்றும் அதனை நிறுத்துமாறு தெரிவித்தாகவும் சில ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கம்!

Date:

இன்று (மே 17) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அவர் வழங்கியிள்ள விளக்கத்தில் அவ்வாறு வெளியான செய்தியில் உண்மையில்லை எனவும் அது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பிரேரனை ஒன்று இன்று கட்சியின் பாராளுமன்ற குழுவினருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் வைத்தியர் ராஜித சேனாரத்ன மற்றும் உதவி செயலாளர் அசோக அபேசிங்க ஆகியோரின் தலைமை வகித்த இந்த குழுவில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அது குறித்த விஷேட அறிவிப்பொன்றை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சமீபத்திய வரலாற்றில் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலாக ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தாக்குதலை குறிப்பிடலாம். அந்த தாக்குதலின் கொடூரமான நினைவு இன்னும் இந்த நாட்டில் எல்லோருக்கும் இருக்கின்றது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கு எதிராகவும் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே எடுத்துள்ளோம், இது ஒருபோதும் மாறாது. தாக்குதலை நடத்தியவர்களையும் அதை ஆதரித்தவர்களையும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகள் என்று நேரடியாக அறிவிக்க ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனையின்றி முன் நிற்கும்.

ஜனநாயகத்தை மதிக்கும் மற்றும் ஆதரிக்கும் கொள்கை ஆழமாக வேரூன்றியுள்ளது, ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த நமது நிலைப்பாடு அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதாகும்.அந்த கோழைத்தனமான தாக்குதல் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை எதிர்க்கும் நிலைப்பாட்டிலே நாம் உள்ளோம்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பல தகவல்களை வெளிப்படுத்தவும், அதைப் பற்றி பாராளுமன்றத்திற்குள்ளேயேயும் வெளியேயும் பேசவும் நாங்கள் ஒருபோதும் நாம் தயங்கவில்லை, மேலும் அது குறித்த விடயங்களை ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு பேசுவதற்கான முழு சுதந்திரத்தையும், ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளோம்.

தாக்குதலில் பலியானவர்கள் அனைவரின் பெயரிலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சாட்சியமளிக்கின்றனர்.

அதற்காக நாம் அனைவரும் நிபந்தனையின்றி போராடுவோம்.கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைக்கும் அதற்காக எழுந்து நிற்பதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி முழு சுதந்திரத்தையும் அளித்துள்ளது என்பதோடு,ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, ஜனநாயகத்திற்கு முன்னுதாரணங்களை அமைக்கும் ஒரு ஜனநாயகத்தின் அளவைக் உள்ளார்ந்து கொண்டுள்ளது.

எனினும்,உயர்ந்த இலக்குகளை அடைவதற்கான எங்கள் பயணத்தில் ஒரு நபர் நம்மைத் தடுக்கிறார் என்றால், அது அத்தகைய நபர்களின் தீய நோக்கங்களும் சதித்திட்ட சார் நம்பிக்கையும் ஆகும்.

 

அந்த தீய குறிக்கோள்களை அடைய தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ள எவரும் இருந்தால், அவர்களிடம் எங்கள் வெறுப்பை வெளிப்படுத்துவோம். எந்தவொரு குழுவும் அவர்களின் முதன்மை அபிலாஷைகளுக்காக செயல்பட்டால், நாங்கள் அதை எதிர்ப்போம், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அந்த முடிவுக்கு ஒப்புக்கொள்வார்கள்.

 

நாடெங்கிலும் உள்ள மக்கள் இன்னமும் அவதிப்பட்டு வருகின்றனர்,அரசாங்கத்தின் தோல்வி ஒரு கணத்தில் உருவாகி வருகிறது.இந் நாட்டில் மாற்று அரசாங்கமாக ஐக்கிய மக்கள் சக்தி ஒரு போதும் அற்ப அபிலாஷைகளை இலக்காகக் கொண்டு செயற்படுவதற்குப் பதிலாக பெதுமக்கள் அபிலாஷைகளை முன்னிலைப்படுத்தியே எப்போதும் செயற்ப்படும் என்பதுடன் இதற்கு எதிராக செயற்படுபவர்கள் மீது அனுதாபம் கொள்வோம்.நிச்சயம் வெறுப்பை வெளிப்படுத்துவோம்.

 

தூய்மையான நோக்கங்களுடனான எங்கள் பயணம், மன ஆணவம் நிறைந்த முதிர்ச்சியடையாத சந்தர்ப்பவாதிகளுக்கு மாற்ற முடியாதது மற்றும் அவர்களின் முக்கிய கனவு பொய்களையும் ஏமாற்றத்தையும் குரல் பதிவின் மூலம் பிரபலப்படுத்துவதாகும், மேலும் நாங்கள் ஒருபோதும் மக்களைக் கைவிட மாட்டோம் என்ற பொறுப்புள்ள சமூக மாற்றத்தைக் இலக்காக் கொண்டிருக்கிறோம்.

எனவே ஈஸ்டர் தாக்குதல் குறித்து உண்மை வெளிப்படும் வரை போராடுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...