உள்நாட்டவர்களும் இனி அமெரிக்க டொலர் பாவிக்கலாம்!

Date:

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களில் சேவைகளை பெற்றுக்கொள்ளும் உள்ளூர்வாசிகள் அவற்றுக்கான கொடுப்பனவை இனிமேல் அமெரிக்க டொலரிலும் செலுத்தலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

உள்ளூர் ஹோட்டல்களில் சேவைகளை பெற்றுக்கொள்ளும் உள்ளூர்வாசிகள் அமெரிக்க டொலரிலும் தமது கொடுப்பனவுகளை இனிமேல் செலுத்தலாம் என்று அனுமதி அளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார் .

இதுவரை காலமும் ஹோட்டல்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து மட்டுமே வெளிநாட்டு நாணயங்களில் கொடுப்பனவுகளை பெற்று வந்தன. ஆனால் இனி அமெரிக்க டொலரில் உள்நாட்டவர்களிடமிருந்தும் தாங்கள் வழங்கும் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் அனுமதி அளித்துள்ளது .

 

உள்ளூர்வாசிகளிடமிருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கி சுழற்சி முறைக்குள் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உள்நாட்டவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் வெளிநாட்டு நாணயத்தை குறிப்பிட்ட ஹோட்டல்கள் இரண்டு வார காலத்துக்குள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாணயமாற்று நிறுவனத்திடம் அல்லது வங்கி ஒன்றில் செலுத்தி அதன் மூலம் அவர்கள் உள்ளூர் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

 

கடந்த ஆண்டு உள்நாட்டு அவர்கள் தம்வசம் வைத்திருப்பதற்கான அமெரிக்க டொலரின் பெறுமதியை 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக அரசாங்கம் அதிகரித்தது அதன்பின் வெளிநாட்டு நாணயங்களின் செயற்பாடு உள்ளிட்டவர்களிடம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது இதைத் தவிர்க்கும் வகையிலேயே வங்கி முறைமைக்குள் வங்கி சுழற்சி முறைமைக்குள் உள் நாட்டில் புழக்கத்தில் உள்ள நாணயங்களை கொண்டு வரும் வகையில் இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...