எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!

Date:

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த கொடுப்பனவை வழங்க வேண்டிய நபர்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு மீன்பிடி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க கூறியுள்ளார்.

இதனிடையே எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று முற்பகல் உத்தரவிட்டுள்ளார்.

கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக கடலில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று காலை உஸ்வெட்டகொய்யாவ கடற்பரப்பில் ஆய்வைமேற்கொண்ட போதே பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...