“எதிர்காலத்தில் எனது கிராமத்தை அபிவிருத்தி செய்வேன்” க.பொ.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மாவட்டரீதியில் முதலிடம் பெற்ற கூலித் தொழிலாளியின் மகள் தர்சிகா! 

Date:

​இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக வந்து எனது கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் என வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கிளி/கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி மகேந்திரம் தர்சிகா தெரிவித்தார்.​

தற்போது நிலவிவரும் அசாதாரண சூழலையும் கருத்தில் கொள்ளாது கல்விக்காக தந்தை கூலி தொழிலை மேற்கொண்டும் , தயார் ஆடுகள் வளர்த்தும் அதில் வருகின்ற வருமானத்தில் வீட்டு செலவுகளையும் கவனித்து எஞ்சிய வருமானத்தில் கல்லவியை தொடர்ந்து இன்று வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தில் வணிகப்பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் 3A பெறுபேறுகளைப்பெற்று முதல் நிலை பெற்று சந்தோஷத்தில் பூரிப்படைந்து தனது கருத்துகளை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான. கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள கோரக்கன்கட்டுவை. எம்.சி எனும் குக் கிராமத்தில் வசிக்கும் குறித்த மாணவியே இவ்வாறு பெறுபேறுகளை பெற்றதுடன் பெற்றோருக்கும் தனக்கு கற்பித்த ஆசிரியர், அதிபர், தனிியார் கல்வி நிலைய ஆசிரியர்களிற்கும் தனது இரு சகோதரர்களிற்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக வந்து எனது கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் என வணிகப்பிரிவில் மாவட்த்தில் முதலிடம் பெற்ற கிளி/கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி மகேந்திரம் தர்சிகா கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான. கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள கோரக்கன்கட்டு வை. எம்.சி எனும் குக் கிராமத்தில் வசிக்கும் குறித்த மாணவியே இவ்வாறு பெறுபேறுகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய இந்த வெற்றிக்குப் பின்னால் உறுதுணையாக இருந்த எனது பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், தனியார் கல்விநிலைய ஆசிரியர்களையும் மற்றும் எனது இரண்டு அண்ணாக்களுக்கும் பெரு மகிழ்ச்சியுடன் நன்றிகளையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...