ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தின் பணிகள் இடைநிறுத்தம்!

Date:

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஐக்கியமக்கள் சக்தியின் தலைமை அலுவலக பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன் பணியாளர்கள் தனிமைப்படுத்தவும் பணிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து செயற்பட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகாதார முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து பணியாற்றிய நாடாளுமன்றின் இரண்டு பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விபரங்கள் நாடாளுமன்றத்தின் கமரா காட்சிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவருடன் தொடர்புடைய பெரும்பாலான எம்.பி.க்கள் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...