ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தின் பணிகள் இடைநிறுத்தம்!

Date:

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஐக்கியமக்கள் சக்தியின் தலைமை அலுவலக பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன் பணியாளர்கள் தனிமைப்படுத்தவும் பணிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து செயற்பட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகாதார முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து பணியாற்றிய நாடாளுமன்றின் இரண்டு பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விபரங்கள் நாடாளுமன்றத்தின் கமரா காட்சிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவருடன் தொடர்புடைய பெரும்பாலான எம்.பி.க்கள் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...