கடந்த மாதத்தில் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 1959 ஆக பதியப்பட்டுள்ளது. அதில் 205 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1254 பேர் காயமரடைந்துள்ளனர்.

இலங்கையின் வாகன விபத்து புள்ளி விபரவியலின்படி, அதிகமான வாகன விபத்துக்கள் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளன. இவ்வாறு ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் அதிகமானவை (768) மேல் மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் வடமேல் மாகாணம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் எண்ணிக்கை 238 ஆகும்.

இதன்படி, ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 51 வீதமானவை மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களே இந்த விபத்துக்களில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த புள்ளி விபரத்திற்கு அமைவாக மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாக, வாரத்தில் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் இடம்பெற்ற நாளாக திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.

இதேவேளை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரையிலான காலப்பகுதியில் அதிகமான வாகன விபத்துக்கள் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...