கடந்த மாதத்தில் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 1959 ஆக பதியப்பட்டுள்ளது. அதில் 205 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1254 பேர் காயமரடைந்துள்ளனர்.

இலங்கையின் வாகன விபத்து புள்ளி விபரவியலின்படி, அதிகமான வாகன விபத்துக்கள் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளன. இவ்வாறு ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் அதிகமானவை (768) மேல் மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் வடமேல் மாகாணம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் எண்ணிக்கை 238 ஆகும்.

இதன்படி, ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 51 வீதமானவை மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களே இந்த விபத்துக்களில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த புள்ளி விபரத்திற்கு அமைவாக மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாக, வாரத்தில் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் இடம்பெற்ற நாளாக திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.

இதேவேளை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரையிலான காலப்பகுதியில் அதிகமான வாகன விபத்துக்கள் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...