கடந்த 24 மணிநேரத்தில் காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 43 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

Date:

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பிரதேசத்தில் இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தரைவழி தாக்குதல் மற்றும் மூர்க்கத்தனமான வான் தாக்குதல்கள் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 43 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனர்களுடனான முழு அளவிலான யுத்தத்துக்கு தாங்கள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெறுகின்ற மிக மோசமான மிகத்தீவிரமான தாக்குதல் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இதனிடையே முதல்தடவையாக பலஸ்தீன பிரதேசத்திலிருந்து ஹமாஸ் தலைமையிலான போராட்டக்குழுவினர்
கடுமையான பதில் தாக்குதலை தொடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. ஆனால் அது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதையும் வெளியிடாமல் இஸ்ரேல் பாதுகாத்து வருகின்றது. இருப்பினும் இதுவரை 5 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஸா பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து உலகளாவிய மட்டத்தில்
எதிர்ப்புகளும் கிளம்பத் தொடங்கி இருக்கின்றன.

லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
நியூயோர்க் நகர ஆர்ப்பாட்டம்
நியூயோர்க் நகர ஆர்ப்பாட்டம்
தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
கராச்சியில் ,டம்பெற்ற ஆர்ப்பாட்டம்
கராச்சியில் ,டம்பெற்ற ஆர்ப்பாட்டம்
லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு கட்டம்
லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு கட்டம்
மொரோக்கோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
மொரோக்கோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
நியூயோர்க் ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு கட்டம்
நியூயோர்க் ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு கட்டம்
துருக்கி ஆர்ப்பாட்டம்
துருக்கி ஆர்ப்பாட்டம்
சூடானில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
சூடானில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
பேரூட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
பேரூட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

ஆகிய பல இடங்களில் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பாரிய அளவிலான மக்கள் தற்போதைய சுகாதார விதிமுறைகளை மீறி வீதிகளில் இறங்கி ஆயிரக்கணக்கானோர் திரண்டு தமது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இஸ்ரேலுக்கு எதிராக உலகளாவிய மட்டத்தில் ஒரே நேரத்தில் மிகத்தீவிரமான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்ற மையும் இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...