கிழக்கில் குவியவுள்ள ரஷ்ய சுற்றுலா பயணிகள்!

Date:

சுற்றுலா குமிழி முறையின் கீழ் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இதை அவர் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ரஷ்யாவின் முன்னணி விமான நிறுவனங்களுடன் ஏற்கனவே இந்த விடயம் குறித்து கலந்துரையாடியதாகவும் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை வாரத்திற்கு இரண்டு முறை அழைத்து வர ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏற்கனவே ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

இந்த முறை தனது கவனம் நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கியே உள்ளது என்றும், சுற்றுலா தலத்தை முற்றிலுமாக முடக்கி, ஒரு பாரிய சுற்றுலா மண்டலத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...