கொவிட் பணிகளில் ஈடுபடும் மூன்று நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களால் நிதியுதவி வழங்கிவைப்பு! 

Date:

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபால் அப்பகுதியில் கொவிட் பணிகளில் ஈடுபடும் மூன்று நிறுவனங்களுக்கு அவரின் சொந்த நிதி 175000.00 ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதன்படி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளையின் அனர்த்த நிதியத்துக்கு 75000.00 உம் AL-MABARRA CHARITY FUND ORGANIZATION க்கு 50000.00 உம் இன்று காலை வழங்கப்பட்ட்து

இது தவிர திருகோணமலை வைத்தியசாலையின் ஜனாஸா தொடர்பான நலன்புரி அமைப்பொன்றுக்கு 50000.00 உம் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ,

இந்நிதியுதவி தவிர கொவிட் மற்றும் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான பௌதீக ,பொருளாதார உதவிகளை செய்துவருகிறோம். மேலதிக உதவிகளை பெற தேவையான முயற்சிகளும் நடைபெறுகின்றன.அவை வெற்றிபெற இறைவனை பிராத்திக்கிறேன். உங்களால் முடிந்த உதவிகளை நீங்களும் வழங்குங்கள் என தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...