சாதனை படைத்த அங்குநொச்சிய, அல்மாஸ் மகா வித்தியாலயம்

Date:

2020 க.பொ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஹொரவ்பொத்தான, அங்குநொச்சிய அல்மாஸ் மஹா வித்தியாலயத்தின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது.
33 மாணவர்கள் கலை துறையில் பரீட்சைக்கு தோற்றி 25 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதோடு அதில் 11 மாணவர்கள் பல்கலைக்கழகம் பெற தகுதி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.ஜ.எம் தௌபீக் தெரிவித்தார்.
இம்முறை அதிகூடிய மாணவர்கள் பல்கலைக்கழகம் பெற தகுதிபெற்றுள்ளமை பாடசாலையின் வரலாற்று சாதனையாக பதிவாகுவதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் கொவிட்19 அசாதாரண சூழ்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் தியாகம் பெரிதும் பாராட்டப்படவேண்டியது எனவும் இதற்காக பாடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பாடசாலையின் அதிபர் ஏ.ஜ.எம் தௌபீக் தெரிவித்தார்.
முஹம்மட் ஹாசில்

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...