சீனாவின் சின்ஜியாங் மாநிலம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை –

Date:

சீனாவின் சின்ஜியாங் மாநிலம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்று அமெரிக்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் தூர மேற்கு மாநிலமான சின்ஜியாங் மாநிலம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாகவே செயற்படுகின்றது என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சிறைச்சாலையில் உய்குர் இன முஸ்லீம்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

என்றுசீனா தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் மனித உரிமைகள்
கண்டபடி மீறப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது போலவே இங்கு வாழுகின்றனர்.

இந்த பிராந்தியம் முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாகத்தான் நடத்தி வருகின்றது.

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச சமய சுதந்திரங்களுக்கு பொறுப்பான பிரிவின் பணிப்பாளர் டேனியல் நடேல் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் .

மீழ் கல்வி ஊட்டல் முகாம் பல வந்த தொழில் முகாம் என்பன உட்பட பல முகாம்களில் இங்குள்ள முஸ்லிம்கள் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் வாஷிங்டனில் இடம்பெற்று ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது நடேல் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறிக்கை ஒன்றையும் தயாரித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார் ஒவ்வொரு தனி மனிதனுடைய நடமாட்டமும் இந்த பிராந்தியத்தில் மிக நுணுக்கமாக அவதானிக்கப்படுகின்றது முஸ்லிம்களுடன் வாழ்ந்து அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டுவதற்காக பெருந்திரளான உளவாளிகள் இங்கு செயற்பட்டு வருகின்றனர் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான், மியன்மார், ரஷ்யா, நைஜீரியா,சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலும் சிறுபான்மையினர் மோசமாக நடத்தப்படுவதாக இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு: ஜெத்தாவில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்!

ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...