ஜனாஸா தொகை அதிகரிக்கின்றது மக்களே கவனம்!

Date:

Covid ஜனாஸா கையாளும் குழுவினரின் அறிக்கையின் படி

நேற்று 29.05.2021 ம் திகதியுடன் 322 வது ஜனாஸாவும் அடக்கப்பட்டுவிட்டது.

ஜனாஸாவின் வேகத்தையும் புள்ளி விபரத்தையும் நோக்கும் போது சிந்திக்க வேண்டியுள்ளது. நிலமை மிகவும் மோசமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

அதாவது,

1. முதல் 100 (100) ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ற்கு 56 நாட்கள்

கடந்துள்ள நிலையில்,

2. இரண்டாவது 100 ஜனாஸாக்களை

அடக்கம் செய்வதற்கு 19 நாட்களும்,

3. மூன்றாவது 122 (321) ஜனாஸாக்களை அடக்குவதற்கு வெறும் 08 நாட்களும் போயுள்ளன.

நிலைமை மிகவு‌ம் மோஷமடைந்து வருகிறது மிக மிக அவதானமாக செயற்படுங்கள். முடிந்தவரை துஆக்களில் இருப்போம்.

மரணம் இறைவனின் திட்டமென்றாலும் தொற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது, இறைத்தூதரின் வழிகாட்டலும் நடைமுறையும் ஆகும்*. குஷ்டரோகியைக் கண்டால் விரண்டோடுங்கள் என்பது வாக்கு ; குஷ்டரோகியின் கையைப் பிடிக்காமல் பைஅத் பெற்றது வாழ்க்கை.

எனவே, இந்த சுன்னாவை புறக்கணித்து தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பேணாது ஒருவர் இந்த நோய்க்கு பலியானால் அது ஷஹாதாவாகாது; மறாக தற்கொலையாகலாம்; அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக.

எனவே, உலமாக்கள் மக்களுக்கு இத்தகைய அசாகான நிலையில் நபிவழியில் மார்க்கத்தை விளக்க வேண்டியது முக்கிய பொறுப்பாகும்.* அரசியல் மற்றும் சமூகத் தலைமைகளும் தமது இந்தப் பொறுப்பை உணர்ந்து சமூகத்தைத்தை அறிவூட்ட முன்வர வேண்டும்.

உங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளையும் உசார்ப்படுத்துங்கள்.

விழிப்புணர்வு குழுக்களை உசார்ப்படுத்துங்கள்.தலைவர்களை உசார்ப்படுத்துங்கள்.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...