ட்ரோன் கெமராவில் சிக்கிய 15 பேர்!

Date:

மன்னாரில் இன்றைய தினம் (30) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கெமராவை பயன்படுத்தி மன்னார் பகுதிகளில் பொது மக்களின் நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர்.

 

இதன்போது கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் வரை இன்று மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மன்னாரில் மைதானங்களில் இளைஞர்கள் கூடி விளையாடியமை, வீதிகளில் கூடி நின்றமை ஆகியவை ட்ரோன் கெமராவின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு மன்னார் பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ள மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 

இதனை மீறி அனுமதி இன்றி வெளியில் பயணிப்போர் மற்றும் வீதிகளில் அநாவசியமான முறையில் நடமாடுபவர்களை கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...