துறைமுக நகர சட்டமூலம் தொடர்பில் 19,20ஆம் திகதிகளில் விவாதம்!

Date:

எதிர்வரும் 18,19,20 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதேவேளை,கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானம் கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...