தொழிலாளர் தேசிய சங்கம் கம்பனிகளுக்கு துணை போகாது!

Date:

சந்தாவை நிறுத்தி தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்க நினைக்கும் கம்பனிகளின் திட்டம் நிறைவேறாது எனவும் சந்தா இல்லாவிட்டாலும் தொழிலாளர்களின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது எனவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை இன்னும் தீரவில்லை எனவும் தொழிலாளர்கள் கம்பனிகளின் கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத தொழிலாளர்களை கம்பனிகள் அச்சறுத்தும் வகையில் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கம்பனிகளின் இந்த தொழிங்சங்க மற்றும் தொழிலாளர் அடக்குமுறைக்கு ஒருபோதும் துணைபோக முடியாது எனவும் இதற்கு எதிராக முன்னின்று செயற்படுவோம் என்றும் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...