நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்பு!

Date:

கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழைக் காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

அத்துடன் நாப்பாவல, தல்தூவ, தெஹியோவிட்ட உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கின அத்துடன் களனி நதி பெருக்கெடுப்பு காரணமாக சீதாவக, தல்தூவ, மாகம்மன, தெஹியோவிட்ட மற்றும் நாப்பாவல ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதிகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக குறித்த பிரதேசத்தின் ஊடகவியலாளர் ஷபீர் முஹம்மத் தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அத்தனகல்ல ஓயாவை அண்டிய திஹாரிய – தூல்மலை பிரதேசத்தின் சில பகுதிகளும் இன்று (14) வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு

மள்வானையில் களனி கங்கையினை அண்மித்த தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும்...

அமைச்சர் விஜித ஹேரத் சவூதி பயணம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்...

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு: பாராளுமன்றில் ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அதற்காக...

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...