நாளை முதல் அடையாள அட்டையின் கடைசி எண்ணியபடியே வெளியில் செல்லலாம்

Date:

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெலா குணரத்ன புதிய சுகாதார வழிகாட்டுதல்களை இன்று முதல் மே 31 வரை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, நாளை முதல் ஒரு நாளில் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்.  இது நபரின் தேசிய அடையாள அட்டை எண்ணின் கடைசி இலக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

அதன்படி, 1, 3, 5, 7, 9 ஆகிய எண்களை அடையாள அட்டையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் ஒற்றை நாட்களிலும் 0, 2, 4, 6, 8 ஆகிய எண்களை அடையாள அடடையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் இரட்டை நாட்களிலும் அத்தியாவசியமல்லாத தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியேற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், 15 நெருங்கிய உறவினர்களின் பங்களிப்புடன் திருமண பதிவுகளை மட்டுமே செய்ய முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர...

உணர்ச்சி பொங்க முதலமைச்சராக பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக...

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....