பொலிஸ் நிலையங்களுக்கு இரண்டு சுற்றறிக்கைகள் அனுப்பி வைப்பு

Date:

இலங்கையில் கொவிட் தொற்றின் மூன்றாவது அனர்த்த நிலையை கவனத்திற் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த முதலாம் திகதி வெளியிட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பொலிஸ் தலைமையகம், நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இரண்டு விசேட சுற்றறிக்கைளை கடந்த 04 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளது.

இதன்படி, புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, வைபவங்களை நடத்துவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தடை உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் தலைமையகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும் புதிய சுகாதார வழிகாட்டல்களின் மூலம் பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் வாடகை வாகனங்கள் தொடர்பாகவும் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுகின்றவர்கள் தொடர்பாகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முகக் கவசங்களை முறையாக அணியாதவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...