பொலிஸ் நிலையங்களுக்கு இரண்டு சுற்றறிக்கைகள் அனுப்பி வைப்பு

Date:

இலங்கையில் கொவிட் தொற்றின் மூன்றாவது அனர்த்த நிலையை கவனத்திற் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த முதலாம் திகதி வெளியிட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பொலிஸ் தலைமையகம், நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இரண்டு விசேட சுற்றறிக்கைளை கடந்த 04 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளது.

இதன்படி, புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, வைபவங்களை நடத்துவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தடை உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் தலைமையகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும் புதிய சுகாதார வழிகாட்டல்களின் மூலம் பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் வாடகை வாகனங்கள் தொடர்பாகவும் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுகின்றவர்கள் தொடர்பாகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முகக் கவசங்களை முறையாக அணியாதவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்...

இனிமேல் அமைதியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை: அமெரிக்க ஜனாதிபதி.

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நோர்வே பிரதமருக்கு...

பாகிஸ்தானில் கல்வி பயின்று திரும்பிய இலங்கை மாணவர்களுக்கு விசேட வரவேற்பு.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து...

மோசமான நிலையில் காற்றின் தரம்: சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்.

நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...