மாரவில வைத்தியசாலையில் 8 வைத்தியர்கள் உட்பட 31 ஊழியர்களுக்கு கொரோனா

Date:

மாரவில ஆதார வைத்தியசாலையில் 8 வைத்தியர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அந்த வைத்தியசாலையில் 31 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த வைத்தியசாலையின் 4 வாட்டுகள் மூடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவற்றை திறக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவுகள் இரண்டும், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சையளிக்கும் இரண்டு வாட்டுகளும் மூடப்பட்டுள்ளன.

அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றிய தாதியர்கள் இருவருக்கு தொற்று ஏற்பட்டதாக கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனைக்கு அமைய நேற்று 5 வைத்தியர்கள் உட்பட 20 பேருக்கு தொற்று உறுதியானது.

எனினும் நேற்று மாலை வேளையில் அந்த எண்ணிக்கை 29 அதிகரித்தது.

இன்று காலையாகும் போது அந்த வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 8 வைத்தியர்களும் அடங்குகின்றனர்.

இதனால் அந்த வைத்தியசாலைக்கு அழைத்துவரப்படும் நோயாளர்கள் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...