மாரவில வைத்தியசாலையில் 8 வைத்தியர்கள் உட்பட 31 ஊழியர்களுக்கு கொரோனா

Date:

மாரவில ஆதார வைத்தியசாலையில் 8 வைத்தியர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அந்த வைத்தியசாலையில் 31 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த வைத்தியசாலையின் 4 வாட்டுகள் மூடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவற்றை திறக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவுகள் இரண்டும், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சையளிக்கும் இரண்டு வாட்டுகளும் மூடப்பட்டுள்ளன.

அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றிய தாதியர்கள் இருவருக்கு தொற்று ஏற்பட்டதாக கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனைக்கு அமைய நேற்று 5 வைத்தியர்கள் உட்பட 20 பேருக்கு தொற்று உறுதியானது.

எனினும் நேற்று மாலை வேளையில் அந்த எண்ணிக்கை 29 அதிகரித்தது.

இன்று காலையாகும் போது அந்த வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 8 வைத்தியர்களும் அடங்குகின்றனர்.

இதனால் அந்த வைத்தியசாலைக்கு அழைத்துவரப்படும் நோயாளர்கள் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...