மாலை தீவின் முன்னாள் ஜனாதிபதியை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்!

Date:

மாலைதீவின் சபாநாயகரும், முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட்டை இலக்கு வைத்து இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (06.05.2021) இரவு இடம்பெற்ற குறித்த தாக்குதல் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது ‌.

குண்டு வெடிப்பை அடுத்து, அவர் ADK வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது காருக்குள் ஏற முற்பட்ட வேளையில் குறித்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதால், அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாமெனவும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து அந்நாட்டின் தலைநகரில் இன்று (06) முதல், இரவு 9.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...