முள்ளிவாய்க்காலில் நடந்தவைகளை பிரதமரிற்கு நாடாளுமன்றத்தில் நினைவுபடுத்திய சுமந்திரன் எம்.பி!

Date:

பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு நினைபடுத்த விரும்புகிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து நான்கு லட்சம் பொது மக்களை மிகவும் பாதுகாப்பாக மீட்டெடுத்தாகவும், அதேபோன்று, தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், வடக்கு கிழக்கு மக்களை மீள்குடியேற்றினோம் என்றும் குறிப்பிட்டார்.

அதேபோன்று, நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சுபீட்சமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறோம் என்றும் மஹிந்த உரையாற்றினார்.

இதன்போது குறிக்கிட்டுப் பேசிய சுமந்திரன், பன்னிரென்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இதே நாளில் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்டதை நினைவுபடுத்துகிறேன் என்றார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...