இன்று தேசிய படை வீரர்கள் தினம் | ராணுவத்தினர் சுமார் 4700 பேருக்கு பதவி உயர்வுகள்

Date:

L.T.T.E இனர்
ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதாக பிரகடனம் செய்யப்பட்ட
இன்றைய தினமான மே மாதம் 18 ஆம் திகதி
தேசிய படை வீரர்கள் தினமாக வருடம்தோறும்
அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது .

அந்த அடிப்படையில் இன்று அனுஷ்டிக்கப்படும் 12வது தேசிய படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு இலங்கை ராணுவத்தின் 452 அதிகாரிகளுக்கும் 4289 ஏனைய தரத்தை சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன .

இவர்கள் அனைவரும் தத்தமது அடுத்தக்கட்ட பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்

ராணுவத் தளபதி
ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய
இந்த பதவி உயர்வுகளை இன்றைய 12வது தேசிய படை வீரர்கள் தினம் முதல்
அமுலுக்கு வரும் வகையில்
வழங்கியுள்ளார்இலங்கை ராணுவத்தில் அண்மைக்காலத்தில் வழங்கப்பட்டுள்ள
மிகப்பெரிய பதவி உயர்வு எண்ணிக்கை இதுவென்று இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது .

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...