மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்!  

Date:

கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களில், பொலிஸ் பிரிவு ஒன்று உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (02) காலை 6 மணியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை பொலிஸ் பிரிவும், களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின், வலான வடக்கு, வேகட வடக்கு, கிரிபேரிய மற்றும் மாலமுல்ல கிழக்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின், திருகோணமலை பொலிஸ் பிரிவின், உவர்மலை கிராம சேவகர் பிரிவு, உப்புவெளி பொலிஸ் பிரிவின், அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின், வலப்பனை பொலிஸ் பிரிவின், நீலந்தந்தஹின்ன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கடந்த 22 மணித்தியாலங்களில் கெஸ்பேவையில் 204 மி.மீ அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

கடந்த 22 மணி நேரத்தில் கெஸ்பேவ பகுதியில் அதிகபட்சமாக 204 மி.மீ...

நாகரிக அரசியல் செய்யும் விஜய்: காதர் மொய்தீன் பாராட்டு!

இந்திய முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் விஜய்...

வரலாறு படைக்கும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற...

இலங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘பௌத்த – முஸ்லிம் உரையாடல்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH-ல்

இலங்கையில் பல சமய, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும்...