சீன அதிபருடன் பைடன் பேச்சு – மோதலைத் தவிர்க்க அதிரடித் தீர்மானம்!

Date:

ஐரோப்பாவில் நேட்டோ படைகளை வைத்திருப்பதை போல இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா வலுவான இராணுவத்தை நிறுத்தும்.அது மோதலுக்காக அல்ல. மோதலைத் தவிர்ப்பதற்காகவே என்பதை சீன அதிபரிடம் தான் கூறியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அரசாங்கம் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பைடன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

நான் பதவி ஏற்று 100 நாட்களில் 100 மில்லியன் கொரோனா தடுப்பூசி போடப்படும் என உறுதி அளித்தேன். ஆனால், தற்போது 100 நாட்களில் 220 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.

அமெரிக்கர்களை பாதுகாப்பதற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்.அத்தோடு
அமெரிக்க மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...