ரயில் சேவையில்  புதிய மாற்றம்!

Date:

யாழ் -கொழும்பு ரயில் சேவையில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் உறங்கல் இருக்கை ஆசன சேவை இணைத்துக் கொள்ளப்படும் என யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் நேற்று தெரிவித்தார்.

இரவு நேர தபால் ரயில் சேவையில் குறித்த உறங்கல் இருக்கை ஆசன வசதி கொண்ட மேலதிக பெட்டி இணைக்கப்பட்டு சேவை இடம்பெறவுள்ளன.

 

இந்த வசதியைப் பெற விரும்புவோர் ஆசன முற்பதிவுகளை யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்,

இதேவேளை, தற்போது ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் வினவியபோது, அதில் எவ்வித உண்மையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து மீண்டும் 1 .15மணிக்கு காங்கேசன்துறையிலிருந்தும் 1 .37மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்தும் கொழும்புக்கு புறப்படும் நகர் சேர் கடுகதி ரயில் சேவை மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் வழமைபோல் தற்போதுள்ள கொரோனா நிலைமைக்கு ஏற்றவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்...

இனிமேல் அமைதியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை: அமெரிக்க ஜனாதிபதி.

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நோர்வே பிரதமருக்கு...

பாகிஸ்தானில் கல்வி பயின்று திரும்பிய இலங்கை மாணவர்களுக்கு விசேட வரவேற்பு.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து...

மோசமான நிலையில் காற்றின் தரம்: சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்.

நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...