இந்தியா போன்று இலங்கை மாறும் அபாயம் என எச்சரிக்கை

Date:

 

இந்தியா போன்று இலங்கை மாறும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் நிலைமைக்கமைய ஒரு வேலைத்திட்டத்தை பின்பற்றி வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தாமல் இருப்பதற்கு தீரமானம் மேற்கொள்ளவில்லை என்றால் இந்தியா போன்ற நிலைமை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் மிகவும் பொறுப்புடன் சுகாதார ஆலோசனைகளை பிற்பற்றுமாறு சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணசேகர பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்கு உரிய சுகாதார முறையை பின்பற்றவில்லை என்றால் நிச்சயம் இந்தியாவின் நிலைக்கு தள்ளப்படுவோம்.

வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் ஏனையவர்களும் முகக் கவசம் அணிந்து மிகவும் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். இல்லை என்றால் வீட்டில் அனைவருக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டு நாடு அபாய கட்டத்தை நோக்கி சென்று விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...