ரஷ்யாவில் இருந்து சுமார் 6 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துகள்!

Date:

ரஷ்யாவில் இருந்து சுமார் 6 இலட்சம் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துகள் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என்று இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னானடோபுள்ளே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 4 ஆம் திகதி 15 ஆயிரம் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைத்துள்ளன. இந்த தடுப்பூசி தொகுதிகள் கழற்றப்பட்டதும் இரண்டு மணி நேரங்களுக்குள் உரியவர்களுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுவரை 11 ஆயிரத்து 334 பேருக்கு இந்தத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கொழும்பு, கொத்தெட்டுவ, மற்றும் கொலன்னாவ மருத்துவ அதிகார பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய சட்ட விதிகள்: பஸ் சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை.

பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய சட்டவிதிகள் மற்றும் பரிசோதனைகள்...

கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத...

IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22)...

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க துருக்கி இணக்கம்.

இலங்கைக்கான  துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü...