றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்பாட்டம்!!

Date:

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரரை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா புதியசாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்…
றிசாட் பதியூதீனை அதிகாலையில் சென்று கைதுசெய்யப்பட்டதையிட்டு வேதனையடைகின்றோம்..
அவரது கைதுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவிக்கின்றோம். அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுத்துவருகின்றது.
அவர் அமைச்சராகவிருந்து பல்வேறு அபிவிருத்திகளை வன்னிமாவட்டத்திலே முன்னெடுத்தவர். எனவே அவர் விடுதலை செய்யப்படவேண்டும். நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும். என்றனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரைத்திருப்திப்படுத்த இந்த கைது,சர்வதேசஉறவுகளே அவரின் விடுதலைக்காய்குரல்கொடு,சிறுபாண்மைதலைமைகளை விடுதலைசெய், போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
வவுனியா நிருபர்

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...