விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அவர்களின் வேண்டுகோள்!

Date:

உங்களின் வீடுகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாம், என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

வீடுகளில் மரணிக்கும் பெரும்பாலான நோயாளர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே, கொவிட்-19 தொற்றுறுதியாகி இருந்தமை கண்டறியப்படுகிறது.

இதன் காரணமாகவே, கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

நோய் அறிகுறிகளை கவனத்திற்கொள்ளாது இருப்பதன் காரணமாகவே இத்தகைய நிலை ஏற்படுகிறது.

இதனால், நோய் காரணமாக பாதிக்கப்படும் முதியோர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அற்றவர்கள் ஆகியோரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...