அலுவலக அடையாள அட்டை அல்லது உயர் அதிகாரியின் கடிதத்தைக் காண்பித்து மாகாணங்களுக்கிடையில் பயணிக்க முடியும்

Date:

ஆகக் குறைந்த பணியாளர்களுடன் அரச அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும்.

ஆகக் குறைந்த மற்றும் அத்தியவசிய பணியாளர்களுடன் அரச அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அரச நிறுவனங்களுக்கு பணியாளர்களை அழைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்து கடந்த வாரம் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன் படி அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் நடைபெறும் என அமைச்சு அறிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் பயணிப்போர் திணைக்கள மற்றும் நிறுவனத் தலைவர் அல்லது உயர் அதிகாரி வழங்கும் கடிதத்தை காண்பித்து பயணிக்க முடியும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அல்லது அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணம் செய்ய முடியும் எனவும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...