இந்தியாவில் கொரோணா வைரஸ் தாக்கத்தில் இரண்டாவது அலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் மூன்றாவது அலைத் தாக்கம் ஒன்றும் தவிர்க்க முடியாததாகும் என்று அந்த நாட்டின் சிரேஷ்ட விஞ்ஞான ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
நேற்று இந்தியாவில் புதிய கொரோனா தொற்றாளர்கள் நாலு லட்சத்து 12 ஆயிரம் பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்துக்குள் மரணங்களின் எண்ணிக்கையும் 3980 ஆகப் பதிவாகியுள்ளது.
இதனிடையே தொடர்ந்தும் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் பிரச்சினைகளை அனுபவித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கின்ற கொரோணா வைரஸ் ஆனது இரட்டை உருமாற்ற வீரியம் கொண்டது என்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிக மோசமான ஒரு வைரஸ் என்றும் ஒரே வைரசுக்குள் இருவகையான உருமாற்றங்கள் ஏற்படுவது இதன் உண்மை நிலை என்றும் அந்த நாட்டின் ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இது பரவி வரும் வேகத்தில் மூன்றாவது அலை தாக்கம் தவிர்க்க முடியாததாக மாறிவிடும் என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட சிரேஷ்ட விஞ்ஞான ஆலோசகர் விஜயராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் ஆஸ்பத்திரி கட்டமைப்புக்கள் மேலும் சிதைவடைந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.