இன்று (31) ஹுவாவி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து ´இடுகம´ சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.
இலங்கையில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ஹுவாவி நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
ஹுவாவி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் பிரிவின் உப தலைவர் சென் மன்ஜி இதன்போது ஹுவாவி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பீடத்தின் ஊடாக இலங்கையில் செயற்படுத்தப்படும் ஐந்தாண்டு சமூக பாதுகாப்பு திட்டத்தை கௌரவ பிரதமருக்கு அறிமுகப்படுத்தினார்.
மேலும்,சுமார் 10000 மாணவர்களை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் திறமையானவர்களாக மாற்றுவதே இந்த சமூக பொறுப்பணர்வு திட்டத்தின் நோக்கமாகும்.