இலங்கையில் கோவிட் மூன்றாவது அலையில் 600 க்கும் மேற்பட்ட மரணங்கள்

Date:

இலங்கையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் போது COVID-19 காரணமாக மொத்தம் 606 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார அமைச்சு நேற்று (23) அறிவித்த  32 இறப்புகள் இதில் அடங்கும்.

மேலும், வைரஸின் முதல் அலைகளின் போது  13 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில்  இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளின் போது மொத்தம் 1,197 இறப்புகள் பதிவாகியுள்ளன, மொத்த இறப்பு எண்ணிக்கை 1,210 ஆக உள்ளது.

மேலும், இறப்புகளில் 567 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது.

321 இறப்புகள் 61- 70 வயதுக்கு இடைப்பட்டவையாகவும், 171 பேர் 51-60 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர்.

87 இறப்புகள் 41 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவையாகவும், கிட்டத்தட்ட 34 இறப்புகள் 31-40 வயதுக்கு இடைப்பட்டவையாகவும் பதிவாகியுள்ளதாக (என்.ஓ.சி.பி.சி) தெரிவித்துள்ளது.

COVID-19 காரணமாக 10-30 வயதுக்குட்பட்ட 15 பேர் இறந்துள்ளதாகவும், ஒன்பது வயதுக்குக் குறைவான இரண்டு பேரும் வைரஸ் காரணமாக மரணித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...