இஸ்ரேலில் ஆட்சி அமைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த வாய்ப்பை நழுவவிட்டார் தற்போதைய பிரதம மந்திரி நெதன்யாகு

Date:

இஸ்ரேலிய பிரதம மந்திரி நெதன்யாகு வுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நேற்று நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவரால் குறிப்பிட்ட அவகாசத்துக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் இஸ்ரேலிய ஜனாதிபதி ரூவேன் லிவ்லின்
தற்போது அந்த வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லெபிட்டுக்கு வழங்கியுள்ளார்.

இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் தேர்தல் இடம்பெற்றது. இரண்டு வருடங்களுக்குள் இடம்பெற்ற நான்காவது தேர்தல் இதுவாகும்.

ஸ்திரமான ஆட்சி ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலில் எந்த ஒரு கட்சிக்கும் போதியளவு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே கூட்டணி கட்சிகளை ஒன்று சேர்த்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் தனிக் கட்சி என்ற வகையில் ஆகக்கூடுதலான ஆசனத்தை பெற்ற பிரதம மந்திரி நெதன்யாஹு பின் வலதுசாரி கட்சிக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நேற்று நள்ளிரவு க்குள் அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

நெதன்யாகு வால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அதனை செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே இரண்டாவது நிலையில் இருந்த
எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லெபிட்டிடம்
ஆட்சி அமைக்கும் பொறுப்பு இப்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலையிலேயே உள்ளார். ஒருவேளை அவராலும் அது முடியாமல் போனால் கடந்த இரண்டு வருடங்களில் ஐந்தாவது தடவையாக மீண்டும் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை இஸ்ரேலில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.

யாயிர் லெபிட்
யாயிர் லெபிட்

 

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...