இஸ்ரேலில் ஆட்சி அமைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த வாய்ப்பை நழுவவிட்டார் தற்போதைய பிரதம மந்திரி நெதன்யாகு

Date:

இஸ்ரேலிய பிரதம மந்திரி நெதன்யாகு வுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நேற்று நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவரால் குறிப்பிட்ட அவகாசத்துக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் இஸ்ரேலிய ஜனாதிபதி ரூவேன் லிவ்லின்
தற்போது அந்த வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லெபிட்டுக்கு வழங்கியுள்ளார்.

இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் தேர்தல் இடம்பெற்றது. இரண்டு வருடங்களுக்குள் இடம்பெற்ற நான்காவது தேர்தல் இதுவாகும்.

ஸ்திரமான ஆட்சி ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலில் எந்த ஒரு கட்சிக்கும் போதியளவு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே கூட்டணி கட்சிகளை ஒன்று சேர்த்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் தனிக் கட்சி என்ற வகையில் ஆகக்கூடுதலான ஆசனத்தை பெற்ற பிரதம மந்திரி நெதன்யாஹு பின் வலதுசாரி கட்சிக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நேற்று நள்ளிரவு க்குள் அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

நெதன்யாகு வால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அதனை செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே இரண்டாவது நிலையில் இருந்த
எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லெபிட்டிடம்
ஆட்சி அமைக்கும் பொறுப்பு இப்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலையிலேயே உள்ளார். ஒருவேளை அவராலும் அது முடியாமல் போனால் கடந்த இரண்டு வருடங்களில் ஐந்தாவது தடவையாக மீண்டும் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை இஸ்ரேலில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.

யாயிர் லெபிட்
யாயிர் லெபிட்

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...