“எமது அணி வீரர்கள் அனைவரும் வீடு திரும்பிய பின்னரே நான் எனது ஊரிற்கு செல்வேன்”-அணித்தலைவர் தோனி!

Date:

இந்தியாவில் கொவிட் தொற்றின் நிலை தீவிரமென்பதால் ஐ.பீ.எல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் பத்திரமாக வீடு போய் சேர்ந்த பிறகே நான் எனது வீடு திரும்புவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (05) காலை காணொளி அழைப்பு மூலம் தனது அணி வீரர்களுடன் கதைத்த தோனி ” முதலில் வெளிநாட்டு வீரர்கள் தமது நாடுகளுக்குத் திரும்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதன் பிறகு உள்ளூர் வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

அணி வீரர்கள் அனைவரும் சென்ற பிறகு தான் நான் எனது ஊரான ராஜ்சிக்கு செல்வேன் அதுவரை டெல்லியில் தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

மைக்கல் ஹஸி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்குப் போக ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில் இன்று (06) மாலை தோனி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தனது சொந்த ஊருக்கு திரும்ப உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...