உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

Date:

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மே 5ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இப் பரீட்சை முடிவுகளை ஏப்ரல் 30க்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது எனினும் முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு கணக்கிடப்பட்ட z-scores மதிப்பெண்கள் இருமுறை சரிபார்க்கப்பட‌ வேண்டும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன.இந் நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறதோடு செயல்முறை முடிந்ததும் முடிவுகளை மே மாதம் 5 அல்லது அதற்கு முன்னர் வெளியிட முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

முடிவுகளின் பின்னர் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.பரீட்சை முடிவுகளை கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் (www.doenets.lk ) பார்வையிடலாம்.

 

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...