எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!

Date:

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த கொடுப்பனவை வழங்க வேண்டிய நபர்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு மீன்பிடி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க கூறியுள்ளார்.

இதனிடையே எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று முற்பகல் உத்தரவிட்டுள்ளார்.

கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக கடலில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று காலை உஸ்வெட்டகொய்யாவ கடற்பரப்பில் ஆய்வைமேற்கொண்ட போதே பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...