ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தின் பணிகள் இடைநிறுத்தம்!

Date:

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஐக்கியமக்கள் சக்தியின் தலைமை அலுவலக பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன் பணியாளர்கள் தனிமைப்படுத்தவும் பணிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து செயற்பட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகாதார முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து பணியாற்றிய நாடாளுமன்றின் இரண்டு பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விபரங்கள் நாடாளுமன்றத்தின் கமரா காட்சிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவருடன் தொடர்புடைய பெரும்பாலான எம்.பி.க்கள் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...