ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தின் பணிகள் இடைநிறுத்தம்!

Date:

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஐக்கியமக்கள் சக்தியின் தலைமை அலுவலக பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன் பணியாளர்கள் தனிமைப்படுத்தவும் பணிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து செயற்பட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகாதார முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து பணியாற்றிய நாடாளுமன்றின் இரண்டு பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விபரங்கள் நாடாளுமன்றத்தின் கமரா காட்சிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவருடன் தொடர்புடைய பெரும்பாலான எம்.பி.க்கள் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...