ஒண்டாரியோ சட்டமன்றத்தின் சட்டமூலம் 104 ற்கு இலங்கை எதிர்ப்பு !  

Date:

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10/05/2021) வெளிநாட்டு அமைச்சகத்தில் இடம்பெற்றது.

 

‘தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம்’ தொடர்பில் ஒன்ராறியோ சட்டமன்றத்தால் 2021 மே 06ஆந் திகதி தனிநபர் உறுப்பினர் சட்டமூலம் 104 ஐ நிறைவேற்றியமை குறித்து அரசாங்கத்தின் ஆழ்ந்த கவலைகளை அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்கின்றமை கண்டறியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய கனடா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணாக இலங்கையில் ‘இனப்படுகொலை’ நடந்திருப்பதை ஒன்ராறியோ சட்டமன்றம் கண்டறிந்திப்பதாக அமைச்சர் விளக்கினார்.

இந்த சட்டமூலத்திற்கான கௌரவ லெப்டினன்ட் ஆளுநரின் அரச அங்கீகாரத்தை நிறுத்துவதற்காக கனேடிய அரசாங்கத்தின் உடனடியான தலையீட்டிற்காக அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பில் இணைந்து கொண்ட வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே, நல்லிணக்க செயன்முறை, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் இருதரப்பு உறவுகளுக்கு சட்டமூலம் 104 ஏற்படுத்தக்கூடிய தீங்குகள் குறித்து விரிவாக விளக்கினார்.

பல முனைகளில் இலங்கைக்கு தொடர்ந்தும் அளிக்கப்பட்ட ஆதரவுக்காக கனேடிய அரசாங்கத்துக்கு வெளிநாட்டு அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்ததோடு, பரந்த அளவிலான இருதரப்பு விடயங்கள் குறித்தும் உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இரட்டை நிலநடுக்கத்தால் வெனிசுவேலாவில் அவசர நிலை பிரகடனம்: உதவ அமெரிக்கா தயார் என டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலாவில் வெறும் 40 நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 என்ற...

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை...

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவலைத் தடுக்க அவசர திட்டம்!

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவல் நிலவரம் குறித்து ஆராய்ந்து,...

2026 தேசிய மீலாதுன் நபி விழா ஆகஸ்ட் 26ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில்…

2026 ஆம் ஆண்டு அரச அனுசரணையுடன் விமர்சையாக நடத்தப்படவுள்ள தேசிய மீலாதுன்...