கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்பது குறித்து புதிய தகவல்கள் | உலக சுகாதார அமைப்பு வெளியீடு

Date:

கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு சில வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. காற்றில் அது பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலான மருத்துவம் நோயாளியின் உடலில் பரவிய கொரோனாவை குணப்படுத்தவில்லை. மாறாக அதன் அறிகுறிகளை வைத்து அதனைக் கட்டுப்படுத்தவே முயற்சிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை கொரோனா கண்ணுக்குத் தெரியாத எதிரியாகவே கருதப்படுகிறது.

முதல் அலையை விட இதன் இரண்டாம் அலை மேலும் ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது. ஒரு நோயாளிக்கு தான் எப்படி வைரசை பரப்புகிறோம் என்று தெரிவதில்லை.

கடந்த 2020 ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட வழிகாட்டல்களில் குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் தொற்று பரவுவதாகவும் இருமல் மற்றும் தும்மலின் போது தெறித்து விழும் நீர்த்துளிகளால் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அது இன்றளவிலும் நீடிக்கிறது.

இந்நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டலின் படி காற்றிலும் கொரோனா தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்பு புவியீர்ப்பு சக்தி காரணமாக காற்றில் நீண்ட தூரம் பரவாமல் வைரஸ் பூமியில் உதிர்ந்துவிடுவதாக கருதப்பட்டது. ஆனால் இப்போது வைரஸ் நீண்ட தூரம் காற்றில் பரவுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...