கொவிட் 19 ஜனாஸாக்களை இறக்காமத்தில் அடக்குவது தொடர்பாக  அம்பாறை GA இன் தெளிவுபடுத்தல்!

Date:

கொவிட் – 19 இனால் உயிரிழப்பவர்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான எந்த அனுமதியினையும் நான் வழங்கவில்லை” என அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

 

“எனினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைவோரை இறக்கமத்தில் நல்லடக்கம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் பரிந்துரை செய்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டார்.

 

“கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம் ஜனாசாக்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை நேற்று 29.05.2021 அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ளார்”.

 

இது பற்றி மாவட்ட செயலாளர் கருத்து தெரிவிக்கையில், “கொவிட் – 19 இனால் உயிரிழப்பவர்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான பரிந்துரையினையே சுகாதார அமைச்சின் செயலாளருக்கு வழங்கினேன்.

 

மாறாக அடக்கம் செய்வதற்கான எந்த அனுமதியினையும் வழங்கவில்லை. குறித்த கடிதத்தின் பிரதிகளை கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளேன்.

 

இறக்காமத்தில் நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என்றார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட செயலாளரின் பரிந்துரைக்கமைய கிண்ணியாவின் மகமாறு பிரதேசத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடந்த 25ஆம் திகதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...