ஜூன் மாத இறுதிவரை பயணத்தடையை முன்னெடுப்பதற்கு அரச மேல்மட்டத்தில் ஆராய்வு..!

Date:

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை ஜூன் மாத இறுதிவரை முன்னெடுப்பதற்கு அரச மேல்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.

இந்த பயணக்கட்டுப்பாடு ஜூன் 7 ஆம் திகதிவரை நீடிப்பதாக நேற்று முன்தினம் அரசு அறிவித்தபோதும் அதனையும் தாண்டி பயணத்தடை தொடரும் வாய்ப்பு இருப்பதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதால், இதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு நீடிக்க அரசு விரும்புவதாக சொல்லப்பட்டது.

நடமாடும் வியாபாரிகளின் சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வீடுகளின் அருகே வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. குறைந்த வருமானமுடைய மக்களுக்கு ஐயாயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

இதர அவசர சேவைகள் இயங்கும். அதனடிப்படையில் பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க அரசு ஆலோசிக்கிறது.

அரச மற்றும் வங்கிகளின் சேவைகளை குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு இயங்கவைக்கவும் ஆலோசிக்கப்படுகிறது என அரசின் முக்கிய பிரமுகரொருவர் நேற்றிரவு தமிழன் செய்திகளிடம் தெரிவித்தார்.

அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளை மறு அறிவித்தல்வரை மூடவும் அரசு தீர்மானித்துள்ளது.

பயணக்கட்டுப்பாடு குறித்தான அரசின் புதிய அறிவிப்பு ஜூன் 5 அல்லது 6 ஆம் திகதிகளில் வெளிவருமென மேலும் சொல்லப்பட்டது.

 

நன்றி : தமிழன்

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...