தியகல பகுதியில் மண்சரிவு!

Date:

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணத்தால் குறித்த வீதியில் வாகன போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று (13) மாலை 06 மணி அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும், பொலிஸாரும் மண்மேட்டை பகுதி அளவில் அகற்றிய பின் 07 மணிக்கு பின்னர் ஒரு வழி போக்குவரத்து இடம்பெறுகின்றது.

எனினும், வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர திருவிழாவின்...

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்!

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் – கொழும்பு இடையிலான...

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% ஆக வீழ்ச்சி

நாட்டில் அநேகமான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சுமார் 74...