நடமாடும் விற்பனை வாகனங்கள் 31 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில்!

Date:

அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் விற்பனை வாகனங்களை எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்துவதற்கான ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி அதாவது ஜூன் மாதம் 7ஆம் திகதி காலை 4.00 மணி வரையில் தற்போதைய பயணக்கட்டுபாடு தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுகிறது. மருந்தகங்களை மாத்திரம் இக்காலப்பகுதியல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்

இதேபோன்று பொருளாதார மத்திய நிலையங்கள் 31 ஆம் திகதி திறக்கப்பட்டு நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பொறிமுறை நேற்று வகுக்கப்பட்டதாகவும் இராணுவ தளபதி கூறினார்.

இம்மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடந்த 25 ஆம் திகதி பொது மக்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதி தனியார் துறையினருக்குl வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு சகல பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பத்திரங்களை வழங்குவது பிரதேச செயலாளர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார் .

அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கான முழுமையான பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களும் காணப்படுகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்கள் இந்த பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...