நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்பு!

Date:

கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழைக் காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

அத்துடன் நாப்பாவல, தல்தூவ, தெஹியோவிட்ட உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கின அத்துடன் களனி நதி பெருக்கெடுப்பு காரணமாக சீதாவக, தல்தூவ, மாகம்மன, தெஹியோவிட்ட மற்றும் நாப்பாவல ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதிகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக குறித்த பிரதேசத்தின் ஊடகவியலாளர் ஷபீர் முஹம்மத் தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அத்தனகல்ல ஓயாவை அண்டிய திஹாரிய – தூல்மலை பிரதேசத்தின் சில பகுதிகளும் இன்று (14) வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு

மள்வானையில் களனி கங்கையினை அண்மித்த தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...