நாளை முதல் அடையாள அட்டையின் கடைசி எண்ணியபடியே வெளியில் செல்லலாம்

Date:

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெலா குணரத்ன புதிய சுகாதார வழிகாட்டுதல்களை இன்று முதல் மே 31 வரை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, நாளை முதல் ஒரு நாளில் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்.  இது நபரின் தேசிய அடையாள அட்டை எண்ணின் கடைசி இலக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

அதன்படி, 1, 3, 5, 7, 9 ஆகிய எண்களை அடையாள அட்டையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் ஒற்றை நாட்களிலும் 0, 2, 4, 6, 8 ஆகிய எண்களை அடையாள அடடையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் இரட்டை நாட்களிலும் அத்தியாவசியமல்லாத தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியேற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், 15 நெருங்கிய உறவினர்களின் பங்களிப்புடன் திருமண பதிவுகளை மட்டுமே செய்ய முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...