நாளை 51 ரயில்கள் சேவையில்!

Date:

நாளை (17) தொடக்கம் அத்தியாவசிய பணிக்காக செல்லும் பயணிகளுக்காக விசேட ரயில்கள் சிலவற்றை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த ரயில்களில் தொழிலுக்கு செல்பவர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என ரயில்வே பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

சுமார் 51 ரயில்கள் நாளை இயக்கப்பட உள்ளதாகவும் மாலையிலும் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தொழிலுக்காக செல்லும் பயணிகளுக்காக நாளை தொடக்கம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவைக்கு ஏற்ப மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...